Monday, September 6, 2010

ஒன்றும் இல்லாத வீடு


ஒருபோதும் உணரமுடியாதபடி இருக்கும்
புணர்ச்சியின் கவிச்சை
நெடிய மூச்சுடன்
அங்குமிங்குமென அல்லலுறுகின்றது
ஒரு வௌவாலென

ஒவ்வொரு தொடுகையிலும்
உன்னில்
உயிர்பெரும் ஏகாந்தத்தில்
உருத்திரளும்
முகம்
யாருடையதாக இருக்குமென்ற சிந்தனையில்
அப்போதுதான் பூத்த
ஒரு மலர் உதிர ஆரம்பிக்கிறது

சற்றைக்கு முன்புதான்
தனது கடைசி சுரப்பையும்
நிறுத்திக்கொண்டு
தகிக்கும் வெண்மணலை பரப்பிச் சென்றது உன் நதி

ஏதாவதொரு
மரணத்திலிருந்துதான் தொடங்குகின்றன
பிரியத்தின்
அனேக உரையாடல்கள்


கடைசியில் நிகழ்ந்தேயாகவேண்டிய ஒன்றாக இருக்கிறது
மரணம்

1 comment:

  1. அன்பின் காலபைரவன்

    கவிதை அருமை

    பூத்த மலர் உதிர் ஆரம்பிக்கிறது - ஒவ்வொரு தொடுகையிலும் உருத்திரளும் முகம் யாருடையதென்று தெரியாமலேயே

    நல்ல கற்பனை
    நல்வாழ்த்துக்ள்
    நட்புடன் சீனா

    ReplyDelete