Friday, October 29, 2010
ஜாக்கிரதை நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்
கவிதையெழுதுவது
குற்றமென
அறிவிக்கப்படுகிறது
திடீரென்று
அனைத்து மாநில எல்லைச் சாவடிகளும்
வருவோரையும் போவோரையும்
கவிஞர்கள் அல்ல என
உறுதி செய்து கொண்ட பிறகே
தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கின்றன
தபால் நிலையங்கள்
தந்தி அலுவலகங்கள்
தனியார் கூரியர் நிறுவனங்கள்
அரசு மற்றும் தனியார் தொலைபேசிகள்
கவிதைகளைப்
பரிமாற்றம் செய்ய
முற்றாக மறுத்துவிடுகின்றன
இந்த ஆண்டின்
எந்த இலக்கிய விழாக்களிலும்
கவிதைகள் கண்டுகொள்ளப்படாமல்
ஒதுக்கப்படுகின்றன
உரைநடை ரூபத்தில் கவிதைகள்
ஏதாவது
வெளிவருகிறதாவென்று கவனிக்க
நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுவிட்டது
கவிஞர்களை ஒடுக்குவதற்கான
அவசரச்சட்டமும் தயார் நிலையில்
கவிதை மற்றும்
கவிஞர்கள் குறித்தான தகவல்களை
அந்தந்த அரசுகள் அரக்கத்தனமாக
அழித்தொழிக்கின்றன
இங்கிருந்தோ
அல்லது வெளிநாடுகளிலிருந்தோ வரும்
கவிஞர்களுக்கான ஆதரவுக் குரல்களின்
முனைகள் உடனுக்குடன் மழுங்கடிக்கப்படுகின்றன
எல்லாம் வழக்கம் போலவே
நடந்து முடிகிறது
கவிஞர்களைப் பொருட்படுத்த வேண்டிய
அவசியம் இங்கு
யாருக்குமே நேரவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
அருமை .
ReplyDelete//கவிஞர்களைப் பொருட்படுத்த வேண்டிய
ReplyDeleteஅவசியம் இங்கு
யாருக்குமே நேரவில்லை//
unmaiyaana kavithai vadiththa ungkalukku vaalththukkal.
//இந்த ஆண்டின்
ReplyDeleteஎந்த இலக்கிய விழாக்களிலும்
கவிதைகள் கண்டுகொள்ளப்படாமல்
ஒதுக்கப்படுகின்றன//
உண்மையை அழகாக எழுதியுள்ளீர்கள்.. அருமை.. தங்களின் பாதி பதிவுகளை இன்று, முதல் முறை வந்தவுடனே படித்து விட்டேன் என்றே கூற வேண்டும். அத்தனையும் அருமை. இததனை நாட்கள் எப்படி என் கண்களில் படாமல் இருந்தது என்று தெரியவில்லை.
நீண்ட நேரமாக தங்கள் இல்லத்திலேயே தங்கி விட்டேன்.. மீண்டும் நாளை வருகிறேன்..
நிச்சயம் எல்லா இடத்திலும் கண்காணிக்கப்படும்.இப்படி பொருள் தருகின்ற கவிதை, மறைமுகத்துடன் எல்லாருக்கும் புறிந்தால்.
ReplyDeleteநன்றி தொழரே.