Sunday, October 10, 2010

ஸ்தனங்கள் இடறும் இரவு


சனிப்பிணம் துணைத்தேடி
வளமோட்டுப் பாறையேறி
கோட்டான் ஒலி கேட்கும்
வாசியம்மன் குறிசுவைக்க
ஐயனாரப்பனுக்கேனிந்த
அவசரம்

கள்ளக் கூடலுக்கு
காட்டேரி துணைபோக
தீவட்டி கொண்டு
சாரிபோகும் கன்னிமார்கள்

பச்சபுள்ளா குளம் தாண்டி
சரடென இழையும்
குறியொலி கேட்டு
கோணமலைப் பிள்ளையார்
குன்றேறிப் பார்ப்பார்

ஈசானத் திக்கில்
சிவனும் தயார் நிலையில்

கந்தவேல் முருகன்
கையாலாகாதவனா

திசையெங்கும் ஏதிரொலிக்கும்
குறிகளின் ஓலம்

பின்
திப்பக்காடு தாண்டி
சூரியப் பிரவேசம்

No comments:

Post a Comment