Sunday, October 10, 2010
ஸ்தனங்கள் இடறும் இரவு
சனிப்பிணம் துணைத்தேடி
வளமோட்டுப் பாறையேறி
கோட்டான் ஒலி கேட்கும்
வாசியம்மன் குறிசுவைக்க
ஐயனாரப்பனுக்கேனிந்த
அவசரம்
கள்ளக் கூடலுக்கு
காட்டேரி துணைபோக
தீவட்டி கொண்டு
சாரிபோகும் கன்னிமார்கள்
பச்சபுள்ளா குளம் தாண்டி
சரடென இழையும்
குறியொலி கேட்டு
கோணமலைப் பிள்ளையார்
குன்றேறிப் பார்ப்பார்
ஈசானத் திக்கில்
சிவனும் தயார் நிலையில்
கந்தவேல் முருகன்
கையாலாகாதவனா
திசையெங்கும் ஏதிரொலிக்கும்
குறிகளின் ஓலம்
பின்
திப்பக்காடு தாண்டி
சூரியப் பிரவேசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment