Sunday, December 5, 2010

சல்லிகை- ஓர் சிறுபத்திரிக்கை முயற்சி


நண்பர்களே,

கண்டாச்சிபுரத்திலிருந்து சல்லிகை எனும் புதிய சிறுபத்திரிக்கை ஒன்றை கொண்டுவர எண்ணி முதற்கட்ட வேலைகளைத் தொடங்கி இருக்கிறேன். நண்பர்களின் துணையின்றி ஒரு சிறு முன்னெடுப்பைக்கூட எடுக்க முடியாது என்றும் கருதுகிறேன்.

உங்களின் காத்திரமான படைப்புகளுக்காகவே சல்லிகை தன் பக்கங்களை விரித்து காத்துக்கொண்டிருக்கிறது. உங்கள் படைப்புகளை அளிப்பதன் மூலம் சல்லிகையை தொடர்ந்து கொண்டுவருவதற்கான ஓர் சூழலை கட்டமைப்பதில் உங்களின் பங்களிப்பை உறுதிசெய்யுங்கள் நண்பர்களே.

இலக்கியத்தின் அனைத்து முயற்சிகளையும் சல்லிகை முன்னெடுக்க விரும்புகிறது. கதை, கவிதை , மொழிபெயர்ப்புகள் மற்றும் கட்டுரைகளின் மீதான சொல்லாடல்களை ஒருங்கினைக்கவே சல்லிகை விரும்புகிறது


உங்களின் ஆலோசனைகளையும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.




-காலபைரவன்




தொடர்புக்கு

சல்லிகை
12.முருகன் கோயில் தெரு
கண்டாச்சிபுரம் & அஞ்சல்
விழுப்புரம் மாவட்டம் -605701
அலைபேசி: 9944413444

9 comments:

  1. thotarnthu kondu varungal, nalvazthukkal

    ReplyDelete
  2. உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Thangalin muyarchiku en eniya nalvaazhthukal

    ReplyDelete
  4. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. உங்களின் விசாரிப்புகள் இன்னும் என்னை கூடுதலான உத்வேகத்துடன் இயங்கச் செய்யும் நண்பர்களே. என் நண்பர்களுடன் கலந்துபேசி விரைவில் நல்ல பல செய்திகளோடு உங்களைச் சந்திக்கிறேன்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள்
    படைப்புகளை மின்னஞ்சலில் அனுப்பலாமா

    ReplyDelete
  7. என்னவளே
    நட்பை விடவும் உயர்ந்த
    ஏதேனுமொரு உறவு உள்ளதா?
    என்று உன்னிடம் கேட்டேன்

    அடடா
    நட்பு என்பது இல்லாமல்
    ஏதேனுமொரு உறவு உள்ளதா?
    என்று திருப்பி கேட்கிறாய்

    ReplyDelete