Saturday, October 16, 2010
ஆனால் என் கடவுள் இளமையிலேயே இறந்து போனார்
செங்காந்தள் நிறமொத்த
அவள் பின்னால்தான்
அவர் சென்றதாக
மாடவீதி மக்கள் பேசிக்கொண்டனர்
அகாலத்தில் அவர்
அவ்வாறு சென்றது
அதிர்ச்சியையேற்படுத்த
மடவிளாகச் சாமியாரை
மண்டியிட்டது
அர்ச்சகர் கூட்டம்
ஊர் என்ன பழிக்குமோ
நாடென்ன பேசுமோவென
அச்சத்தில் இருந்தார்
குரு மகாசன்னிதானம்
திருக்காப்பிட்ட பின்
தேவடியா மகனுக்கு
தெருவில் என்ன வேலையென்று
ஓர் கூட்டம்
கத்திச் சென்றது
(நிச்சயம் தேவடியா மகன் என்றே அவர்கள்
கூறினார்கள்)
கையும் களவுமாக
பிடிப்பட்டவுடன்
குனிந்த தலை நிமிராது
கருவறை நோக்கிச் சென்றார்
எல்லாம் அறிந்த
இராமநாதீஸ்வரர்.
எள்ளும் கொள்ளும் வெடிக்க
ஒருக்களித்து
படுத்துக் கொண்டாள்
உடனுறையும்
ஞானாம்பிகை
மறு நாளிலிருந்து
மடிமீது
அவளை அமரவைத்தபடி
அருள்பாலித்துக் கொண்டிருந்தார்
அவர்.
அன்றிலிருந்து தான்
அவருக்கு
சுய இன்பப்பழக்கம்
ஏற்பட்டிருக்குமென
குரு மகாசன்னிதானம்
கூறத்தொடங்கினார்.
உடனுறையும்
ஞானம்பிகைக்கு
எந்தக் கேடும்
இப்போது
இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
நல்லா இருக்கு நண்பா..
ReplyDeleteஇராமனாதீஸ்வரர்? உண்மையான ஏதாவது கோவிலை அடிப்படையாகக் கொண்டு எழுதி இருக்கீங்களா?
அப்படி ஒன்றும் இல்லை பாண்டியன்.இராமனாதீஸ்வரர் என் ஊரில் குடி கொண்டிருக்கும் சிவனின் பெயர் அவ்வளவே.
ReplyDeleteஅருமை தோழர்
ReplyDeleteகவிதை மட்டும் அல்ல கார்த்திகைப் பாண்டியனுக்கான தங்கள் பதிலும்.