கடந்த 8.5.2011 அன்று கண்டாச்சிபுரத்தில் 1983-84ஆம் ஆண்டு கண்டாச்சிபுரம் மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ந்தது.
தாங்கள் படித்த முதல் வகுப்பு ஆசிரியரில் இருந்து பத்தாம் வகுப்பு போதித்த ஆசிரியர்கள் வரை அனைவரையும் விழாவிற்கு அழைத்து வந்திருந்தனர் விழாவின் அமைப்பாளர்களான சு.திருநாவுக்கரசு, ஞான.சந்திரசேகரன் மற்றும் எல்.குமரவேல் எனும் முன்னாள் மாணவர்கள்.
பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டு செய்யப்பட்டது.மேலும் பயின்ற பள்ளிகளுக்கு நினைவுக் கேடயமும் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டது.
நெகிழ்ச்சியும் அன்பும் ததும்பிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமத்தின் சில காட்சிப் பதிவுகள் இங்கே.
நெகிழ்ச்சியும் அன்பும் ததும்பிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமத்தின் சில காட்சிப் பதிவுகள் //
ReplyDeleteஅருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
என்னவளே
ReplyDeleteஊர் போய் திரும்புகையில்
சொர்கத்தை பார்த்த மாதிரி
ஆனந்தம் ஏன்? என்கிறாய்
அடடா
தொடக்கக்கல்வி பயின்ற
பள்ளிக்கூடத்தை விட
சொர்க்கம் இருக்கிறதா என்ன?